அம்மாவின் விரல் பிடிக்காமல்
அதிகாலைப் பேருந்தின் சற்றே உயரமான படிகளில்
சிறிய மெனக்கெடலுடன் ஏறி
பற்றுதலுக்கான கம்பி நோக்கி விரைவதற்குள்
முன்னகர்ந்த பேருந்தினுள்
தள்ளாடிச் சரியும் சிறுமியின்
இடது முழங்கைச் சிராய்ப்புகளில்
பிறக்கும் பெருங்குரலெடுத்த அழுகையில்
நிசப்தம் உடைந்து துயிலெழுகிறது இம்மாநகரம்!
மாநகரைத் துயிலெழுப்புபவள்
Posted by
ஸ்ரீவி சிவா
வெள்ளி, மார்ச் 20, 2009
Labels: கவிதை Download As PDF
5 comments:
பாஸ் பிச்சுபுட்ட போ.. என்ன ஒரு கவிதை.. பயங்கரமா பீல் பண்ணி இருக்க..
எங்க பாஸ் எந்த மாதிரீ எல்லாம் கத்து கிட்ட..
மாடர்ன் ஆர்ட் போடோ ரொம்ப நல்ல இருக்கு..
நன்றி பாலா...
//எங்க பாஸ் எந்த மாதிரீ எல்லாம் கத்து கிட்ட.. //
என்ன பண்றது? எல்லாம் தானா வருது... :)
dei shiva epdi da unaku ipdi ellam thonuthu..
anyway you are rocking...
nanri Anony...
ரொம்ப எதார்த்தமா, நல்லா இருக்கு சிவா.
கருத்துரையிடுக