வனம் புகுதலின் துவக்கம்



"
கிழக்குச் சீமையிலே" படத்தில் விஜயகுமார் Vs நெப்போலியன் பஞ்சாயத்து காட்சியின்போது, 'தாய் மாமா' எனும் உறவின் பெருமைகளை பக்கம் பக்கமாக ரவுண்ட் ட்ராலி ஷாட்டில் விஜயகுமார் பேசும் வசனங்களை கவனத்துடன் நினைவு கூர்கிறேன். 'ஏன்'னு கேக்குறீங்களா ? சிச்சுவேஷன் அப்படி. மிக மகிழ்ச்சியான சேதி. தங்கைக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. சென்ற வாரம். தாயும் சேயும் நலம்.
பிறந்து ஒரு வாரமே ஆன குழந்தையை என் கைகளில் ஏந்துவது இதுதான் என் வாழ்வின் முதல் முறை.
குழந்தை அவ்வளவு அழகு. என் தலையை விளையாட்டு மைதானமாக்க இது நாள் வரை கொட்ட வைத்த முடியெல்லாம் மருமகளுக்கு கொடுத்து விட்டார் போலும் கடவுள். தலைமுடி மிக அடர்த்தியாய். பகலெல்லாம் தூங்கி, பின் இரவெல்லாம் அழுகிறாள். பகலில் கண்கள் மூடி தூங்கும் போதும் சில நேரங்களில் புன்னகைக்கிறாள். "கடவுள் அவளுக்கு கதை சொல்லிட்டு இருக்காரு... அதனாலதான் சிரிக்கிறா. நீ டிஸ்டர்ப் பண்ணாம தள்ளி நில்லு" என்கிறாள் என் தங்கை.


%%%%%%%%%%%%%%%%%%


சென்ற மாதம் ஒரு வாரயிறுதியில்,சென்னை ட்ரெக்கிங் கிளப்(CTC) நண்பர்களுடன்(~25 பேர் ), பொள்ளாச்சி டாப்ஸ்லிப் பகுதியில் காடு-மலை என சுற்றி திரிந்தேன் . இந்த CTC என்பது, லாப நோக்கில் இயங்கும் அமைப்பு அல்ல. செலவுகளையும் பொறுப்புகளையும் சமமாய் பங்கிட்டு, தன் முனைப்புள்ள, சுற்று சூழல் அக்கறையுள்ள ஆர்வலர்கள் நிரம்பிய, தனக்கு தானே சீரான விதிகள் வரையறுத்து கொண்டு மலையேறும்/ஊர் சுற்றும் குழு. 80% பொட்டி தட்டும் நண்பர்கள். பல ட்ரெக்கிங் ட்ரிப் அனுபவம் பெற்ற சங்கத்து சிங்கம் பாலா என்னையும் சேர்த்து விட்டான்.


இரண்டு நாட்களில் காடு மலை என 25 கிமீ சுற்றியிருப்போம். போகும் வழியில் ஒரு சின்ன அருவி குளியல், யானை துரத்த தெறித்து ஓட்டம், ஒரு கிராமத்தின்(சேத்துமடை) அரசு பள்ளியில் உடனடி அனுமதி வாங்கி அங்கு 'sleeping bag' உதவியுடன் இரவு உறக்கம், சில அரிய வகை விலங்குகள், சராசரிக்கு அதிகமாய் உடலுழைப்பு கோரும் மலையேற்றம், செங்குத்தான மாற்று பாதை வழியாக கண்ணை கட்டிய மலையிறக்கம்(?!) என்று கலந்து கட்டிய பல அனுபவங்கள். நிறைய கற்றுக் கொண்டேன்.
மதங் கொண்ட யானை துரத்திய நிகழ்வு மரண பயம் என்னவென்று உணர்த்தியது. குளித்து முடித்த பின் சிறு சிறு குழுவாய் பிரிந்து மாலை பொழுதில் அடர் வன சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது, எதிர் திசையில் வந்த இரண்டு டூ வீலர் அன்பர்கள் "யானை துரத்துது... ஒடுங்க" என எங்கள் நால்வர் குழுவை கடுமையாக எச்சரித்தனர். என்னுடன் இருந்த மூவர் அந்த இரு வண்டிகளில் ஏறி கிளம்ப, ஏறி பதுங்க மேடு எதுவும் இல்லாத அந்த சம தள வனத்தில் தெறித்து ஓட ஆரம்பித்தேன். சாலை வளைவுக்கு பின்னிருந்து பிளிறல் சத்தம். என்ன புண்ணியமோ... எச்சரித்து முன் சென்ற TVS50 காரர் மீண்டும் நிறுத்தி என்னையும் ஏற்றி கொள்ள தப்பித்தேன்.

ஆங்.. சொல்ல மறந்துட்டேன். இந்த குழுவில் சேரும் போதே, "எந்த விதமான சேதாரத்துக்கும் நாங்கள் பொறுப்பல்ல" அப்படின்னு சொல்லி ஒப்புதல் வாங்கிட்டுதான் சேர்ப்பாய்ங்க. நியாயம்தான பாஸ்?


%%%%%%%%%%%%%%%%%%


வி.தா.வருவாயா பாடல்கள் வந்ததுலேர்ந்து ரெக்கார்டு தேயத்தேய கேட்டாச்சு. முதல்ல கொஞ்சம் பிடித்த இப்படத்தின் இசை, ஒரு புள்ளியில் சுற்றி வளைத்து உள்ளிழுத்து கொண்டது. 'ஹோசானா' , 'ஓமனப் பெண்ணே' மற்றும் 'மன்னிப்பாயா' எனக்கு பிடிச்சது. மற்ற பாட்டுகளும் நல்லாயிருக்கு. 'ஆரோமலே'ன்னு ஒரு புது வெரைட்டி பாட்டு. அசத்துகிறார் அற்புத ரகுமான். படம் சீக்கிரம் பார்க்கணும். நான் மிகவும் எதிர்ப்பார்த்த தாமரை ஒரு சில இடங்களில் 'அட' போட வெச்சாலும், எதிர்பார்த்த அளவிற்கோ(அ) 'வாரணம் ஆயிரம்' அளவிற்கோ கலக்கவில்லை.
ஸ்ரேயா கோஷல் பற்றிய என்னோட ட்விட்டர் கமெண்ட்:
உலகின் உயர்தர ஒயின் வகைகளை சுவைக்க வேண்டும் என ஆர்வம் உண்டு. இன்னும் கைகூடவில்லை. வி.தா.வ படத்தின் "மன்னிப்பாயா ..." பாடலில்...ஸ்ரேயா கோஷல் குரலை கேட்ட பின்பு அந்த ஒயின் வகைகள் இப்படித்தான் இருக்குமோவென நினைத்துக் கொள்கிறேன்.


%%%%%%%%%%%%%%%%%%


Strokes of Love

பகல் பொழுதுகளில், மெதுவாய்
கூடுகள் சுமந்தலையும் சிறு நத்தைக் கூட்டத்திற்கு
நிழல் பரப்பி இணையாய் நகர்ந்து
வெப்பம் தணிக்கிறாள் ஒரு சிறுமி.

மழை நாளொன்றில் ஒற்றைக் குடையை
மகனுக்களித்து விட்டு,
சேலைத் தலைப்பால் தலை மூடி நனைந்து கொண்டே
மகனுடன் சாலை கடக்கிறாள் இளம் தாயொருத்தி.

இரை தேடித் திரியும் அணிலைக் கையிலெடுத்து
தன் சட்டை
நுனியில் பால் நனைத்து
துளிகளாய்ப் பிழிந்து ஊட்டுகிறார்
நடைபாதையில் வசிக்கும் முதியவரொருவர்.

துயருறும் பொழுதுகளிலெல்லாம்
விழி மூடி மடி சாய
முடி கோதி முத்தங்கள் தர
வேண்டும் உனைப்போல் காதலியொருத்தி.

இவர்களைப் போன்ற சிலர் தரும்
பேரன்பு எனும் விசையால்
இன்னும் சமன் குலையாமல்,
சுழன்று கொண்டிருக்கிறது ஓர் உலகம்.


பாஸ்... பாஸ். கோபப் படாதீங்க. லெஸ் டென்சன் மோர் வொர்க். மோர் வொர்க் லெஸ் டென்சன். என்னோட அலுவலகத்தில "இது காதல் வாரம்" அப்படின்னு மெயில் விளம்பரம் பண்ணி பல போட்டிகள் நடத்தினாய்ங்க. ஆங்கிலம் உள்பட இந்திய மொழிகள் ஐந்தில் கவிதை போட்டி வேற. விட்ருவோமா? பச்சை மஞ்ச கருப்பு பிங்க் தமிழனாகிய நான், தமிழ் பிரிவில் கலந்துகிட்டு கொடுத்த தலைப்புக்கு தாவாங்கட்டைய தடவி யோசிச்சு யோசிச்சு எழுதினதுதான் மேலே. கவிதைங்குற பெயரில் நான் பண்ண இந்த அராஜகத்துக்கு ரெண்டாவது இடம் வேற... எப்பூடி? பரிசு தான் இன்னும் கொடுக்கல. 'Cinthol' சோப்பு வைக்கிறதுக்கு வகையா ஒரு சோப்பு டப்பாவை பேராவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். :)

15 comments:

பரிசல்காரன் செவ்வாய், மார்ச் 09, 2010 6:36:00 AM  

சிவா-

ட்ரெக்கிங் போனீங்களா? பொறாமைப் படவைக்கறீங்க! தனிப்பதிவாவே போட்டிருக்கலாம்!

ஸ்ரேயாகோஷல் கமெண்ட் அசத்தல்.

@ சோப்புடப்பா - உங்களை நீங்களே குறைச்சு மதிப்பிடாதீங்க. கண்டிப்பா, டப்பாவோட சோப்பும் தருவாங்க.

பெயரில்லா செவ்வாய், மார்ச் 09, 2010 12:30:00 PM  

super bossu!!

விக்னேஷ்வரி செவ்வாய், மார்ச் 09, 2010 5:47:00 PM  

வாழ்த்துகள் மாமா. :)

வாவ், வனம் சுற்றும் அனுபவம். கேட்கவே ஆவலா இருக்கு. கேட்க மட்டும் தான். நம்மாளலாம் யானைக்குப் பய்ந்து ஓட முடியாது. ;)

நிஜமாவே ஷ்ரேயா கோஷல், குரல் வரம் வாங்கிப் பிறந்தவர். ஒயின்-ஷ்ரேயா கோஷல் நல்லாருக்கு.

கவிதை ரொம்ப நல்லாருக்கு. சோப்பு டப்பாவிற்கு வாழ்த்துகள்.

ஸ்ரீவி சிவா செவ்வாய், மார்ச் 09, 2010 7:34:00 PM  

உங்கள் வருகைக்கு மிக மகிழ்கிறேன் பரிசல்... நன்றி.

//ட்ரெக்கிங் போனீங்களா? பொறாமைப் படவைக்கறீங்க! //
:) நண்பனொருவன் புண்ணியத்தில் எனக்கு முதல் ட்ரெக் இதுதான்.

//தனிப்பதிவாவே போட்டிருக்கலாம்!//
அப்படித்தான் நானும் நினைச்சேன்... மித மிஞ்சிய சுய புராணம் ஆயிடுமோன்னு பயந்து அப்படி செய்யல.

//உங்களை நீங்களே குறைச்சு மதிப்பிடாதீங்க. கண்டிப்பா, டப்பாவோட சோப்பும் தருவாங்க. //
:) இதுக்கு பேருதான் வஞ்ச புகழ்ச்சியோ?!?!

ஸ்ரீவி சிவா செவ்வாய், மார்ச் 09, 2010 7:37:00 PM  

@அனானி
நன்றி பாஸு...

இது 'பாலா' தான? ஏன் முகமூடி போட்டுட்டு அனானியா வந்திருக்க பாஸு?

ஸ்ரீவி சிவா செவ்வாய், மார்ச் 09, 2010 7:53:00 PM  

@விக்கி,
வாங்க விக்கி.
ஆகா... நம்ம கடைக்கு பெரிய பதிவர்கள் எல்லாம் வர்றாங்க.முதல்ல பரிசல், இப்போ நீங்க.ம்ம்ம்...சந்தோஷமா இருக்கு.

//வாழ்த்துகள் மாமா. :)//
:)

//நம்மாளலாம் யானைக்குப் பய்ந்து ஓட முடியாது. ;)//
யானை அதனோட முழு வேகத்துல துரத்திருந்தால் நானும் ஓடியிருக்க மாட்டேன் விக்கி. எங்க கொள்ளு தாத்தா பண்ணின புண்ணியம் என்னை காப்பாதிருச்சு. :)

//ஷ்ரேயா கோஷல், குரல் வரம் வாங்கிப் பிறந்தவர்//
உண்மைதான்!!!

//ஒயின்-ஷ்ரேயா கோஷல் நல்லாருக்கு//
;)

//கவிதை ரொம்ப நல்லாருக்கு. சோப்பு டப்பாவிற்கு வாழ்த்துகள். //
நெசமாலுமே நல்லாருக்கா? சோப்பு டப்பா வாழ்த்துக்களுக்கு நன்றி ஹை!!

Bee'morgan புதன், மார்ச் 10, 2010 4:27:00 PM  

ha ha.. Good one..
kittathatta kavithai mathiri.. label i rasiththen.. :)

Unknown புதன், மார்ச் 10, 2010 10:51:00 PM  

"துயருறும் பொழுதுகளிலெல்லாம்
விழி மூடி மடி சாய
முடி கோதி முத்தங்கள் தர
வேண்டும் உனைப்போல் காதலியொருத்தி."

ரசிக்கக்கூடிய வரிகள்.அருமையா.... சிவா

'Strokes of Love' தமிழ் கவிதைக்கு இங்கிலீஷ் தலைப்பு ம்ம்ம்ம்

ஸ்ரீவி சிவா வியாழன், மார்ச் 11, 2010 11:19:00 AM  

@ Bee'morgan
:) நன்றி Bee'morgan ... அடிக்கடி வாங்க.

@divya
நன்றி divya.
நான் சொன்னா மாதிரி ஆறு மொழியில் கவிதை போட்டி. இதுதான் பொது தலைப்பு. :)

நேசமித்ரன் செவ்வாய், மார்ச் 23, 2010 5:27:00 PM  

கவிதை நல்லாருக்கு

ஸ்ரீவி சிவா செவ்வாய், மார்ச் 23, 2010 10:34:00 PM  

ரொம்ப நன்றி நேசமித்ரன்... அடிக்கடி வாங்க :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) வியாழன், ஏப்ரல் 15, 2010 9:17:00 PM  

வாழ்த்துக்கள் சிவா

//"கடவுள் அவளுக்கு கதை சொல்லிட்டு இருக்காரு... அதனாலதான் சிரிக்கிறா. நீ டிஸ்டர்ப் பண்ணாம தள்ளி நில்லு" என்கிறாள் என் தங்கை.//

இந்த மாதிரி சொல்றத நானும் கேட்டு இருக்கேன். அழகு தான் இல்லையா

ஸ்ரீவி சிவா வெள்ளி, ஏப்ரல் 16, 2010 2:50:00 PM  

நன்றி தங்கமணி .
//அழகு தான் இல்லையா //
மிக சரி. ரொம்ப அழகான விஷயம்.

அது சரி.. இந்த பேரை(அப்பாவி தங்கமணி) எங்க புடிச்சீங்க?
நல்லாயிருக்கு. சொல்லும்போதே உங்க மேல எக்கச்சக்கமா இரக்கம் வருது.

உத்தண்டராமன் ஞாயிறு, ஏப்ரல் 25, 2010 10:13:00 AM  

இந்த கவிதைக்கு இரண்டாவது இடமா.. நன்ம்பா ஆர்வம் கூடுகிறது முதல் பரிசு வென்ற கவிதை காண ..:) அநேகமா அதையும் நீயே எழுதி இருக்க வேண்டும்..

மாமனான செய்தி மகிழ்ச்சி.. தங்கையும் மருமகளையும் கேட்டதாக சொல்லவும் ..

நறுமுகை செவ்வாய், ஜூன் 08, 2010 11:24:00 AM  

ஹாய் நண்பரே..

தங்களின் வலைப்பூவை எங்களுடன் பகிர்ந்து கொண்டு உங்களின் படைப்புகள் மேலும் பலருக்கு செல்ல வாய்ப்பளியுங்கள்.


www.narumugai.com

கருத்துரையிடுக

இதுவரை பார்த்தவர்கள்

தேடு

Facebook-ல மொக்கை போட