சரியான சொற்களைத் தேடி
அயர்ந்து வெறுமையாய் திரும்புகிறேன்.
மற்றுமொரு முறை உன் விழிகளை உற்று நோக்க,
எங்கோ முடிவிலியின் விளிம்பில் முளைத்த
செடியின் மலர்கள் உதிர்வதைப் போல
எனக்கான சொற்களை
உன் விழிகள் உதிர்க்க துவங்குகின்றன!
இயன்றவரை எல்லவற்றையும் சேகரித்துக் கொண்டு
சிறுவனுக்குரிய மகிழ்ச்சியுடன்
தொடுவானம் நோக்கி விரைகிறேன்...
முற்றுப் பெறக் காத்திருக்கும் என் கவிதைகளை நிரப்ப!
சொற்களைத் தேடி
Labels: கவிதை Download As PDF