துயில் கலைந்த ஓர் இரயில் பயண பின்னிரவில்,
ரசித்து மனம் நனையலாம்.
எதிர் இருக்கை சிறுமிக்காக
பதில்கள் தேடலாம்.
தேநீர்கிடைக்கத் தவமிருக்கலாம்.
என் ஏழாவது கவிதையை விட சிறந்த
ஒன்றிற்காகவும் முயற்சிக்கலாம்.
உன் முத்தங்களின் மகரந்தம்,
என் சுற்று வளியை ஆட்கொள்கிறது.
நான் கவிதைக்கான வார்த்தைகள்
கோர்க்கத் துவங்குகிறேன்.