அம்மாவின் விரல் பிடிக்காமல்
அதிகாலைப் பேருந்தின் சற்றே உயரமான படிகளில்
சிறிய மெனக்கெடலுடன் ஏறி
பற்றுதலுக்கான கம்பி நோக்கி விரைவதற்குள்
முன்னகர்ந்த பேருந்தினுள்
தள்ளாடிச் சரியும் சிறுமியின்
இடது முழங்கைச் சிராய்ப்புகளில்
பிறக்கும் பெருங்குரலெடுத்த அழுகையில்
நிசப்தம் உடைந்து துயிலெழுகிறது இம்மாநகரம்!
மாநகரைத் துயிலெழுப்புபவள்
Labels: கவிதை Download As PDF