அடுத்த முறை வீசும் காற்றுக்கு,
வீழ்ந்து விடும் சாத்தியமுள்ள
பாதி முறிந்த கிளையொன்றின் மீது கவனம் குவித்து
உன் வருகைக்காக காத்திருக்கிறேன்.
கூடிக் களித்த கணங்கள் - கோடி
எனினும்,
ஒவ்வாத தருணங்களின் நினைவுகள்
அடிநாக்கில் செறிவான கசப்புச் சுவையை
படர விட்டுக் கொண்டிருக்கிறது தற்சமயம்.
இதுதான் இறுதியான பிரிவாக வேன்டுமென,
என் தரப்பின் எல்லா அபத்த வாதங்களையும் கொண்டு
மனதிற்குள் ஓர் ஒத்திகை
நிகழ்த்தி முடித்தாகி விட்டது.
உன் அருகாமையின் அருமை உணரா
என் உலக போலி நியாயங்கள், சுயநலம்
வஞ்சம், கோபம், கயமை எல்லாம்
வெகு விரைவில் வறண்டு அழியக்கூடும்.
அதற்காகவாவது பிரிந்து போ... இன்றேனும்.
பிரிவின் எதிர்பார்ப்புகளுடன்.....
Posted by
ஸ்ரீவி சிவா
வெள்ளி, அக்டோபர் 03, 2008
2 comments:
Kadaisi finishing super!!
நன்றி!!!
கருத்துரையிடுக